முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தாயார் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவிப்பு

சென்னை: மு.க.ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாளின் உடல்நிலை சீராக உள்ளது .... மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் கருணாநிதியின் மனைவியும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தாயாருமான தயாளு அம்மாளுக்கு 90 வயதாகிறது. இந்நிலையில், அவருக்கு நேற்று இரவு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து தயாளு அம்மாள் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

உணவு ஒவ்வாமையால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாளுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இதையடுத்து டாக்டர்களின் தொடர் கண்காணிப்பில் தயாளு அம்மாள் சிகிச்சை பெற்று கொண்டு வருகிறார்.

சென்னை ஆர்.ஏ. புரத்தில் முத்தமிழ் விழாவிலிருந்து தனது தாயார் சிகிச்சை பெற்று வரும் அப்பல்லோ மருத்துவமனைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைந்தார். அதன்பின்னர் தயாரின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

இந்நிலையில், தயாளு அம்மாள் உடல்நிலை தேறி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர். அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தயாளு அம்மாள் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் உள்ளார். இந்நிலையில், தயாளும் அம்மாள் உடல்நிலை சீராக உள்ளதாகவும், விரைவில் அவர் நலம் அடைந்து வீடு திரும்புவார் எனவும் மருத்துவமனை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.