திருவாரூர், நாகைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பயணம்

சென்னை: 4 நாள் பயணமாக திருவாரூர் மற்றும் நாகை மாவட்டத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செல்கிறார். சென்னையில் வருகிற 24-ஆம் தேதி காலை 9 மணிக்கு திருச்சி சென்று அங்கு இருந்து இரவு நாகை மாவட்டத்துக்கு செல்கிறார் முதலமைச்சர்.

இதையடுத்து அதன்படி, திருக்குவளையில் வருகிற ஆக.25ம் தேதி காலை உணவு விரிவாக்க திட்டத்தை முதலமைச்சர் முக ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். அதன் பின்னர் நாகை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் ஆய்வு கூட்டத்தில் முதலமைச்சர் பங்கேற்று திட்டங்கள் பற்றி ஆலோசனை நடத்த உள்ளார்.

முதலமைச்சரின் கள ஆய்வு திட்டத்தின் கீழ் ஆக.26ம் தேதி 4 மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தவுள்ளார். அதைதொடர்ந்து தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் உயரதிகாரிகளுடன் வருகிற ஆக.26ம் தேதி முதலமைச்சர் ஆலோசனை மேற்கொள்கிறார்.

இதையடுத்து,வருகிற ஆக.27ல் திருத்துறைப்பூண்டியில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு மீண்டும் சென்னை திரும்புகிறார் முதலமைச்சர். இந்நாள் பயணத்தில் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளார்.