ஆசியான் பயிற்சியை கண்காணிக்க முயன்ற சீன கப்பல்கள்

புதுடில்லி: கண்காணிக்க முயன்ற சீனா... தென் சீனக் கடலில் நடத்தப்பட்ட ஆசியான் பயிற்சியின் போது சீனக் கப்பல்கள் போர் ஒத்திகையை கண்காணிக்க முயன்றதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து கூறிய பாதுகாப்புத்துறை அதிகாரி ஒருவர், ஆசியான் அமைப்பின் நாடுகளுடன் இந்திய கடற்படைப் பயிற்சியின் போது, சீனக் கப்பல்களும், விமானங்களும் கண்காணிக்க முயற்சி செய்ததாக அவர் தெரிவித்தார்.

குறிப்பாக சீனாவின் மிலிஷியா வகை கப்பல்கள் காணப்பட்டதாக அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார். பயிற்சியின் போது சீனக் கப்பல்கள் நெருங்கி வந்தாலும் பயிற்சியைத் தடுக்கவில்லை என்றும், அதே நேரம் அவற்றின் செயல்பாடுகள் கண்காணிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.