கடந்த 24 மணி நேரத்தில் 8582 பேருக்கு கொரானா பாதிப்பு

புதுடில்லி: நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 8582 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 8,582 பேருக்கு கோவிட் உறுதியானது.

4,435 பேர் குணமடைந்தனர். 4 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4,26.52,743 பேராகவும், இறந்தவர்களின் எண்ணிக்கை 5,24,761 ஆகவும் உயர்ந்தது. தற்போது 44,513 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நேற்று மட்டும்13,04,427 டோஸ் தடுப்பூசி போடப்பட்டது. இதன் மூலம், இதுவரை போடப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 195.07 கோடி டோஸ் ஆனது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.