தமிழகத்தில் பரவி வரும் கொரோனா தாக்குதலுக்கு நேற்று புதிதாக 5 ஆயிரத்து 659 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் உள்மாநிலத்தில் வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்கள் 5 ஆயிரத்து 646 பேர். விமான நிலைய கண்காணிப்பில் உள்நாட்டில் இருந்து வந்தவர்களில் 6 நபருக்கும், சாலை மார்க்கமாக சொந்த ஊர் வந்தவர்களில் 7 நபருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டதுள்ளது.
இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 97 ஆயிரத்து 602 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களில் 46 ஆயிரத்து 263 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 5 ஆயிரத்து 610 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்து 41 ஆயிரத்து 819 ஆக அதிகரித்துள்ளது.
ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு நேற்றைய 67 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு இதுவரை பலியானோர் எண்ணிக்கை 9 ஆயிரத்து 520 ஆக அதிகரித்துள்ளது. மாவட்ட வாரியாக நேற்று புதிதாக கொரோனா பரவியவர்களின் எண்ணிக்கை:- அரியலூர் - 31 செங்கல்பட்டு - 335 சென்னை - 1,295 கோவை - 574 கடலூர் - 137 தர்மபுரி - 41 திண்டுக்கல் - 32 ஈரோடு - 161 கள்ளக்குறிச்சி - 41 காஞ்சிபுரம் - 207 கன்னியாகுமரி - 97 கரூர் - 56 கிருஷ்ணகிரி - 75 மதுரை - 88 நாகை - 48 நாமக்கல் - 161 நீலகிரி - 80 பெரம்பலூர் - 14 புதுக்கோட்டை - 88 ராமநாதபுரம் - 12 ராணிப்பேட்டை - 82 சேலம் - 378 சிவகங்கை - 27 தென்காசி - 38 தஞ்சாவூர் - 266 தேனி - 68 திருப்பத்தூர் - 58 திருவள்ளூர் - 275 திருவண்ணாமலை - 147 திருவாரூர் - 56 தூத்துக்குடி - 91 திருநெல்வேலி - 93 திருப்பூர் - 137 திருச்சி - 97 வேலூர் - 139 விழுப்புரம் - 112 விருதுநகர் - 16 விமான நிலைய கண்காணிப்பு - 6