தமிழகத்தில் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. மாநிலத்தில் நேற்று புதிதாக 1 ஆயிரத்து 320 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 90 ஆயிரத்து 240 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 10 ஆயிரத்து 788 பேர் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், சிலர் தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்றும் வருகின்றனர்.
மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 1 ஆயிரத்து 398 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் மாநிலத்தில் வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 7 லட்சத்து 67 ஆயிரத்து 659 ஆக அதிகரித்துள்ளது. ஆனாலும், கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு நேற்று 16 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 11 ஆயிரத்து 793 ஆக உயர்ந்துள்ளது. மாவட்ட வாரியாக கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் விவரம்:-
அரியலூர் - 32 செங்கல்பட்டு - 554 சென்னை - 3,257 கோவை - 899 கடலூர் - 92 தர்மபுரி - 137 திண்டுக்கல் - 198 ஈரோடு - 399 கள்ளக்குறிச்சி - 54 காஞ்சிபுரம் - 268 கன்னியாகுமரி - 160 கரூர் - 145 கிருஷ்ணகிரி - 168 மதுரை - 219 நாகை - 183 நாமக்கல் - 222 நீலகிரி - 210 பெரம்பலூர் - 4 புதுக்கோட்டை - 83 ராமநாதபுரம் - 39 ராணிப்பேட்டை - 72 சேலம் - 531 சிவகங்கை - 64 தென்காசி - 96 தஞ்சாவூர் - 193 தேனி - 50 திருப்பத்தூர் - 76 திருவள்ளூர் - 497 திருவண்ணாமலை - 152 திருவாரூர் - 127 தூத்துக்குடி - 139 திருநெல்வேலி - 174 திருப்பூர் - 536 திருச்சி - 191 வேலூர் - 319 விழுப்புரம் - 92 விருதுநகர் - 136 விமானநிலைய கண்காணிப்பு - 20