நெல்லை மாவட்டத்தில் மேலும் 147 பேருக்கு கொரோனா உறுதி

நெல்லை மாவட்டத்தில் ஏற்கனவே 5,641 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் மேலும் 147 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் மொத்தம் 2 லட்சத்து 63 ஆயிரத்து 222 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 2 லட்சத்து 02 ஆயிரத்து 283 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இருப்பினும், பலி எண்ணிக்கை 4241 ஆக உயர்ந்துள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1,02,985 ஆக அதிகரித்துள்ளது. சென்னையை தொடர்ந்து தற்போது தென் மாவட்டங்களில் கொரோனா வேகமாக பரவி வருகிறது.

நெல்லை மாவட்டத்தில் நேற்று வரை 5,641 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 3,289 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மருத்துவமனைகளில் 2,297 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவுக்கு இதுவரை 55 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் இன்று நெல்லை மாவட்டத்தில் மேலும் 147 பேருக்கு கொரோனா உறுதியானது. இதனை தொடர்ந்து மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,788-ஆக உயர்ந்துள்ளது.