புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் 40 பேருக்கு கொரோனா உறுதி

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஏற்கனவே 495 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று மேலும் 40 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

தமிழகத்தில் நேற்று புதிதாக 4 ஆயிரத்து 231 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 26 ஆயிரத்து 581 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், கொரோனா தாக்குதலுக்கு தமிழகத்தில் இதுவரை 1,765 பேர் பலியாகியுள்ளனர். தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 78 ஆயிரத்து 161 ஆக அதிகரித்துள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் 73 ஆயிரத்து 728 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பரவி வருகிறது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று வரை 495 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 206 கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 281 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவுக்கு 8 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் 40 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 535-ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பரவலை தடுக்கும் விதமாக மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் தடுப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.