கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 165 பேருக்கு கொரோனா உறுதி

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏற்கனவே 3,849 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் மேலும் 165 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் வேகமாக பரவி வருகிறது. மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் 6 ஆயிரத்து 993 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 20 ஆயிரத்து 716 ஆக அதிகரித்துள்ளது.

நோய் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 54 ஆயிரத்து 896 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாநிலத்தில் கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 62 ஆயிரத்து 249 ஆக அதிகரித்துள்ளது. ஆனால், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 571 ஆக அதிகரித்துள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 95,857 ஆக அதிகரித்துள்ளது. தற்போது மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக தென் மாவட்டங்களில் கொரோனா தாக்குதல் அதிகளவில் உள்ளது.

இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏற்கனவே 3,849 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் மேலும் 165 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,014 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 1,964 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 32 பேர் உயிரிழந்துள்ளனர்.