காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேலும் 240 பேருக்கு கொரோனா உறுதி

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏற்கனவே 5,697 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் மேலும் 240 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 86 ஆயிரத்து 492 ஆக அதிகரித்துள்ளது. நோய் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 51 ஆயிரத்து 765 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும், நோய் பாதிப்பில் இருந்து மாநிலத்தில் 1 லட்சத்து 31 ஆயிரத்து 583 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ஆனாலும், மாநிலத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு 2 ஆயிரத்து 700 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதிகபட்சமாக சென்னையில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 89,561 ஆக அதிகரித்துள்ளது. சென்னையை தொடர்ந்து தற்போது கொரோனா தொற்று அனைத்து மாவட்டங்களிலும் வேகமாக பரவி வருகிறது.

இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏற்கனவே 5,697 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில் இன்று மேலும் 240 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,937 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 3,051 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 74 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

கொரோனா நோய் தொற்றை தடுக்க மாநில மற்றும் மாவட்ட அரசுகள் பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். தமிழக அரசு அனைத்து மாவட்டங்களிலும் பரிசோதனை நடவடிக்கைளை தீவிரப்படுத்தி வருகிறது.