காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேலும் 261 பேருக்கு கொரோனா உறுதி

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏற்கனவே 5,095 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் மேலும் 261 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 75 ஆயிரத்து 678 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 21 ஆயிரத்து 776 ஆக அதிகரித்துள்ளது. மேலும், மாநிலத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 551 ஆக அதிகரித்துள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 87,235 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தற்போது திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு மதுரை, தேனி மற்றும் தென் மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.

இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏற்கனவே 5,095 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் மேலும் 261 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,356 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை மாவட்டத்தில் 2,839 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஆனால் இதுவரை சிகிச்சை பலனின்றி 69 பேர் உயிரிழந்துள்ளனர்.