திருப்பதி தேவஸ்தானத்தில் பணிபுரியும் 160 ஊழியர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
ஏழுமலையான் கோவில் உள்பட பல இடங்களில் பாதுகாப்பு பணியில் உள்ள சிறப்பு
போலீசாரில் 60 பேர், லட்டு தயாரிப்பு ஊழியர்கள், அர்ச்சகர்கள் என மொத்தம்
160 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
மொத்தம் உள்ள 40
அர்ச்சகர்களில் 14 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட அனைவரும் திருமலையில் உள்ள அர்ச்சகர்கள் பவனில்
தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு
வருகிறது என்று கூறினார்.