மதுரையில் புதிதாக 44 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

தமிழகத்தில் பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு நேற்று புதிதாக 2 ஆயிரத்து 435 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 31 ஆயிரத்து 942 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தற்போது 19,201 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பரிசோதனை எண்ணிக்கை அதிகரித்து வருவதால் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தற்போது கொரோனா பரவல் குறைந்து வருகிறது. மதுரையில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. அந்த வகையில் நேற்று புதிதாக 44 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அவர்களில் 30 பேர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள். மீதம் உள்ளவர்கள் புறநகர் பகுதியை சேர்ந்தவர்கள்.

இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18 ஆயிரத்து 854 ஆக உயர்ந்துள்ளது. ஒருபுறம் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதுபோல் மறுபுறம் அதிலிருந்து மீண்டு வருபவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

அதன்படி மதுரையில் நேற்று ஒரே நாளில் 50 பேர் குணம் அடைந்தனர். இவர்களுடன் சேர்த்து மதுரையில் கொரோனாவில் இருந்து குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆயிரத்து 969 ஆக அதிகரித்துள்ளது. இவர்களை தவிர 465 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள். மதுரையில் நேற்று கொரோனாவுக்கு யாரும் பலியாகவில்லை.