வைத்தியசாலை பணியாளருக்கு கொரோனா... கொழும்பு- சீமாட்டி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் பணிக்குழாமின் பணியாளர் ஒருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மாளிகாவத்தை பகுதியை சேர்ந்த ஒருவருக்கே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், இவரின் சகோதரர் ஒருவருக்கு ஏற்கனவே கொரோனா வைரஸ் தொற்று உறுதி
செய்யப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் பி.விஜயசூரிய
தெரிவித்துள்ளார்.
குறித்த வைத்தியசாலையில் மருத்துவர் உள்ளிட்ட 14
பணிக்குழாமினருக்கு இதுவரை கொரோனா வைரஸ் தொற்று உறுதி
செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.