சென்னையிலிருந்து திருப்பூருக்கு வந்த பெண் உதவி ஆய்வாளருக்கு கொரோனா

பெண் எஸ்.ஐக்கு கொரோனா... சென்னையில் இருந்து விடுமுறையில் திருப்பூர் வந்த பெண் எஸ்.ஐ.,க்கு கொரோனா உறுதியானது. இதையடுத்து அவரது கணவர் பணியாற்றி வந்த திருப்பூர் வடக்கு போலீஸ் ஸ்டேசன் மூடப்பட்டது.

சென்னையை சேர்ந்த பெண் போலீஸ் எஸ்.ஐ. ஒருவர் கடந்த சில தினங்களுக்கு முன்பாக திருப்பூர் வந்திருந்தார். அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவரது கணவர் பணியாற்றி வந்த திருப்பூர் வடக்கு போலீஸ் ஸ்டேஷன் தற்போது மூடப்பட்டது.

மேலும் போலீஸ் குடியிருப்பு, போலீஸ் கேண்டீன், பகுதி சீல் வைக்கப்பட்டது. கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யும் பணி நடந்தது. ஸ்டேஷன் போலீசார், குடியிருப்பில் உள்ளோருக்கு பரிசோதனை செய்யப்பட உள்ளது.

இதேபோல் கோவை எஸ்பி அலுவலகத்தில் பணியாற்றும் பெண் அமைச்சு பணியாளர் ஒருவருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. சமீபத்தில், அவர் பழனி சென்று வந்துள்ளார். இதனையடுத்து நேற்று அவருக்கு கொரோனா பரிசோதனை நடந்தது. அதில், அவருக்கு தொற்று ஏற்பட்டது உறுதியாகியுள்ளது. தொடர்ந்து அவர் கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து, எஸ்.பி., அலுவலகத்தில் அவர் பணியாற்றிய 2வது தளம் மூடப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு தூய்மைப்பணி நடந்தது.