கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் கனடாவில் 383 பேர் பாதிப்பு

கனடாவில் கொரோனா வைரஸ் தொற்றினால், கடந்த 24 மணி நேரத்தில் 383 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 5 பேர் பலியாகி உள்ளனர் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 24ஆவது நாடாக கனடா உள்ளது. இதுவரை ஒரு இலட்சத்து 23ஆயிரத்து 873பேர் மொத்தமாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், மொத்தமாக 9ஆயிரத்து 54பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், நான்காயிரத்து 531பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு, ஒரு இலட்சத்து பத்தாயிரத்து 288பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுதவிர, 61பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தற்போதுவரை உலக அளவில் 205 நாடுகளுக்கு பரவி உள்ளது. இதனால் மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர், பொருளாதாரமும் பாதிப்படைந்துள்ளது. பல நாடுகளில் வேலையிழப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.