தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று மட்டும் புதிதாக 2 ஆயிரத்து 710 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 62 ஆயிரத்து 87 ஆக அதிகரித்துள்ளது. தொற்று பாதிக்கப்பட்டவர்களில் 27 ஆயிரத்து 178 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மாநிலத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 34 ஆயிரத்து 112 ஆக அதிகரித்துள்ளது. இருப்பினும், கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மாநிலத்தில் வைரஸ் தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் 37 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 794 ஆக அதிகரித்துள்ளது.
மாவட்ட வாரியாக கொரோனா உயிரிழப்பு விவரம்: செங்கல்பட்டு - 53 சென்னை - 623 கோவை - 1 கடலூர் - 3 திண்டுக்கல் - 4 ஈரோடு - 1 கள்ளக்குறிச்சி - 1 காஞ்சிபுரம் - 12 கன்னியாகுமரி - 1 கிருஷ்ணகிரி - 2 மதுரை - 8 நாமக்கல் - 1 புதுக்கோட்டை - 1
ராமநாதபுரம் - 2 ராணிப்பேட்டை - 2 சிவகங்கை - 1 தஞ்சாவூர் - 1 தேனி - 2 திருவள்ளூர் - 42 திருவண்ணாமலை - 7 தூத்துக்குடி - 4 திருநெல்வேலி - 4 திருச்சி - 1 வேலூர் - 3 விழுப்புரம் - 12 விருதுநகர் - 1