திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,427 ஆக உயர்வு

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஏற்கனவே 1,372 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் மேலும் 55 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்குதல் தீவிரம் அடைந்து வருகிறது. தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு நேற்று ஒரே நாளில் 2,865 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஆக 67,468 அதிகரித்துள்ளது.

கொரோனாவால் நேற்று ஒரே நாளில் 33 பேர் உயிரிழந்த நிலையில் பலி எண்ணிக்கை 866-ஆக அதிகரித்துள்ளது.தமிழகத்தில் இதுவரை கொரோனாவில் பாதிக்கப்பட்டு 37,763 பேர் குணமடைந்துள்ளனர்.

அதிகபட்சமாக சென்னையில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 45,814 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் ஏற்கனவே 1,372 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் மேலும் 55 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,427 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 546 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 7 பேர் உயிரிழந்துள்ளனர்.