திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,414 ஆக உயர்வு

திருவள்ளூர் மாவட்டத்தில் ஏற்கனவே 3,277 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில் இன்று ஒரேநாளில் 137 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்த வண்ணம் உள்ளது. தமிழகத்தில் இதுவரை 74,622 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். பலி எண்ணிக்கை 957 ஆக அதிகரித்துள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 49,690 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் சென்னைக்கு அண்டை மாவட்டமான திருவள்ளூர் மாவட்டத்தில் ஏற்கனவே 3,277 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் இன்று ஒரேநாளில் 137 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,414 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 1,923 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 55 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் திருவள்ளூர் மாவட்டம் உட்பட 6 மாவட்டங்களில் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது.