ராமநாதபுரம் மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா - 737 பேருக்கு பாதிப்பு உறுதி

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 74,622 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 41,357 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 957-ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 108 பேருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 663 ஆக உயர்ந்தது.

நோய்த்தொற்று கண்டறியப்பட்டவர்கள் வசிக்கும் பகுதிகளில் நோய் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கடந்த சில நாட்களாக ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் கணிசமாக உயர்ந்து வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் இன்று 74 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 737 ஆக அதிகரித்துள்ளது. இதில் பரமக்குடி அரசு மருத்துவமனை 4 செவிலியர், ராமநாதபுரம் லேப் டெக்னீசியன் உள்ளிட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

முககவசம், பிபிடிகிட், கையுறைகள் போன்ற பாதுகாப்பு கவசங்களை முறையாக வழங்காதால் தொற்று பரவியிருக்கலாம் என்ற செய்தி பரவி வருகிறது. தொடர்ந்து கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபடும் சுகாதாரத்துறை, காவல்துறை பணியாளருக்கு தொற்று பரவி வருவதால் பணிகளில் தொய்வு அடையும் நிலை உள்ளது.