குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்குள் புகுந்த வெள்ளத்தால் பாதிப்பு

குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்குள் வெள்ளம் புகுந்தது. இதை வெளியேற்றும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டனர்.

'நிவர்' புயல் காரணமாக, தொடர்ந்து மழை பெய்து வருகிறது. புறநகர் பகுதிகளில், பல இடங்களில் வெள்ளம் தேங்கிஉள்ளது. நேற்று முன்தினம் இரவு பெய்த மழையால், தென்சென்னையில் உள்ள ஒரே அரசு மருத்துவமனையான, குரோம்பேட்டை மருத்துவமனையில் பழைய கட்டடத்திற்குள் வெள்ளம் புகுந்தது.