இந்திய பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ள எம்.பி., சி.வி.விக்னேஸ்வரன்

இந்திய பிரதமர் மோடிக்கு இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி. விக்னேஸ்வரன் கடிதம் எழுதியுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது: இந்தியாவினால் வழங்கப்படும் உதவிகள் தமிழ் மக்களுக்கு எதிராக பயன்படுத்தப்பட கூடாது என்ற உத்தரவாதத்தை இலங்கை அரசிடம் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று இந்திய பிரதமர் மோடியை கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது 13 வது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டமைக்கு தனது நன்றியையும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக பாரத பிரமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ள சி.வி. விக்னேஸ்வரன், பிரதமர் மோடியின் செயலானது தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்களைக் கூட்டியுள்ளது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.