கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழப்பு: உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு..

தமிழ்நாடு: தனியார் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

கள்ளக்குறிச்சி அருகேவுள்ள சின்னசேலம் தனியார் பள்ளியில் மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் பாதிக்கப்பட்ட தந்தை சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இதன் விசாரணைக்கு இன்று காலை நடைபெற்றது. அப்போது, இதுபோன்ற இயற்கைக்கு முரணான மரணங்கள் தொடர்பான வழக்குகளை சிபிசிஐடி விசாரிக்க வேண்டும்.

பிரேத பரிசோதனையை வீடியோ பதிவு செய்ய வேண்டும். சமூக வலைதளங்கள் மீடியா டிரயல் நடத்த அனுமதிக்க கூடாது. விசாரணை குறித்த அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.மறு பிரேத பரிசோதனைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

பிரேத பரிசோதனையை வீடியோ பதிவு செய்ய வேண்டும். மனுதாரர் தனது வக்கீலுடன் பிரேத பரிசோதனையின் போது இருக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.