அரசு பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியீடு

சென்னை: தமிழக பள்ளிக்கல்வித்துறை அரசு பள்ளிகளில் அடுத்த ஒரு வருடத்திற்குள் ஏற்பட இருக்கும் முதுநிலை ஆசிரியர் காலி பணியிடங்களில் பட்டியலை அளிக்க உத்தரவு பிறப்பித்து உள்ளது.

இதையடுத்து இது குறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிக்கையில், தமிழக அரசு பள்ளிகளில் அடுத்த 1 வருடத்திற்குள் ஏற்பட இருக்கும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் விவரங்களை கணக்கெடுக்கப்பட உள்ளன. இவை அடுத்து தங்கள் எல்லைக்குட்பட்ட மேல்நிலை பள்ளிகளில் உள்ள நேரடி நியமன காலி பணியிட விவரங்களை தயார் செய்ய வேண்டும்.

எனவே அதன்படி கடந்த ஜூன் 1 முதல் 2024 மே 31 வரை ஓய்வு பெற இருக்கும் முதல் நிலை ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குனர்கள், உடற்கல்வி இயக்குனர்கள் மற்றும் கணினி பயிற்றுநர்களின் விவரங்களை பணியிடம் வாரியாக தனித்தனியாக தயார் செய்து அனுப்பி வைக்க வேண்டும். இதில் எந்த வித தவறும் நடைபெறாது உரிய முறையில் அனைத்து பள்ளிகளையும் செய்து முடிக்க வேண்டும் என அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தற்போது இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டு தமிழக அரசு பள்ளிகளில் அடுத்த காலியாகவுள்ள முதுநிலை ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.