கடும் பொருளாதார நெருக்கடியிலும் யாழ்ப்பாணத்தில் தேசிக்காய்க்கு பெரும் மவுசு

இலங்கை: தேசிக்காய்க்கு பெரும் மவுசு... கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் அனைத்துப் பொருட்களின் விலைகளும் தற்போது சடுதியாக அதிகரித்துள்ள நிலையில் யாழில் தேசிக்காய்க்கும் பெரும் மவுசு ஏற்பட்டுள்ளது.

அந்த வகையில் யாழ்.மாவட்டத்தின் முக்கிய சந்தையாக கருதப்படும் திருநெல்வேலிச் சந்தையில் கடந்த சில தினங்களாக 250 ரூபாவாக விற்பனை செய்யப்பட்டு வந்த ஒரு கிலோ தேசிக்காயின் விலை 600 ரூபாவாக விற்பனை செய்யப்பட்டது.

யாழில் வர்த்தக நிலையங்களில் ஒரு தேசிக்காய் 50 ரூபாவாகவும் இன்றையதினம் விற்பனை செய்யப்பட்டது.

இதேவேளை, தேசிக்காயின் வரத்து முன்னரை விடப் பெருமளவு குறைவடைந்தமையே தேசிக்காய் விலை அதிகரிப்புக்குக் காரணம் என வியாபாரிகள் தெரிவித்தனர்.