திமுக இளைஞரணி மாநில மாநாடு குறித்து செயலாளர்கள் கூட்டத்தில் விவாதம்

சென்னை: தி.மு.க. இளைஞரணி 2-வது மாநில மாநாடு குறித்து மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வருகிற 26-ம் தேதி காலை 10.30 மணியளவில் தி.நகரில் உள்ள அகார்ட் ஓட்டலில் நடைபெறும்.

அப்போது மாவட்ட செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்.

தி.மு.க. இளைஞரணி 2-வது மாநில மாநாடு மற்றும் வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள், உறுப்பினர்களின் பணிகள் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.