சேலம் அருகே கோவில் திருவிழாவில் தகராறு

சேலம்: கோயில் திருவிழாவில் தகராறு... சேலம் அருகே கோவில் திருவிழாவில் நடைபெற்ற வண்டிவேடிக்கை நிகழ்ச்சியில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் ஏற்பட்டது.

வேம்படிதாளம் கிராமத்தில் ஸ்ரீசக்தி மாரியம்மன், காளியம்மன் கோவிலில் பங்குனி மாதத் திருவிழாவை ஒட்டி, வண்டி வேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது.



அப்போது, வேம்படிதாளம் ஊராட்சி மக்களுக்கும் ஆனைகுட்டப்பட்டி ஊராட்சி மக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில், ஐந்து பேர் படுகாயமடைந்த நிலையில் சேலம் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த மோதல் சம்பவம் குறித்த வீடியோ மற்றும் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை எற்படுத்தி உள்ளது.