தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொடர்ந்து பரவி வருகிறது. மாநிலத்தில் நேற்று மட்டும் புதிதாக 5 ஆயிரத்து 589 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 86 ஆயிரத்து 397 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 46 ஆயிரத்து 306 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் சிலர் தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்றும் வருகின்றனர்.
மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 5 ஆயிரத்து 554 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் மாநிலத்தில் வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்து 30 ஆயிரத்து 708 ஆக அதிகரித்துள்ளது. ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு நேற்று 70 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 9 ஆயிரத்து 383 ஆக உயர்ந்துள்ளது. மாவட்ட வாரியாக கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் விவரம்:- அரியலூர் - 179 செங்கல்பட்டு - 2,189 சென்னை - 11,043 கோவை - 5,117 கடலூர் - 1,492 தர்மபுரி - 1,002 திண்டுக்கல் - 484 ஈரோடு - 1,120 கள்ளக்குறிச்சி - 498 காஞ்சிபுரம் - 895 கன்னியாகுமரி - 990 கரூர் - 492 கிருஷ்ணகிரி - 862 மதுரை - 696 நாகை - 528 நாமக்கல் - 973 நீலகிரி - 930 பெரம்பலூர் - 130 புதுக்கோட்டை - 718 ராமநாதபுரம் - 154 ராணிப்பேட்டை - 400 சேலம் - 2,768 சிவகங்கை - 264 தென்காசி - 442 தஞ்சாவூர் - 1,169 தேனி - 527 திருப்பத்தூர் - 550 திருவள்ளூர் - 1,589 திருவண்ணாமலை - 972 திருவாரூர் - 1,079 தூத்துக்குடி - 593 திருநெல்வேலி - 857 திருப்பூர் - 1,633 திருச்சி - 768 வேலூர் - 885 விழுப்புரம் - 997 விருதுநகர் - 292 விமானநிலைய கண்காணிப்பு - 27 ரெயில் நிலைய கண்காணிப்பு - 2