தமிழகத்தில் கடந்த மாதம் முதல் கொரோனா வைரஸ் பரவல் தீவிரம் அடைந்து வருகிறது. இந்நிலையில் நேற்று ஒரே நாளில் புதிதாக 3,943 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 90 ஆயிரத்து 167 ஆக அதிகரித்துள்ளது.
இதில் வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து விமானம் மூலம் வந்தவர்களில் 717 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் ரெயில் மூலம் வெளிமாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வந்தவர்களில் 406 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியாகி உள்ளது.
கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களில் 38 ஆயிரத்து 889 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து 50 ஆயிரத்து 74 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை 1,201 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். மாவட்ட வாரியாக கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை:- அரியலூர் - 462 செங்கல்பட்டு - 5,419 சென்னை - 58,327 கோவை - 538 கடலூர் - 1,073 தர்மபுரி - 81 திண்டுக்கல் - 472 ஈரோடு - 157 கள்ளக்குறிச்சி - 850 காஞ்சிபுரம் - 1,977 கன்னியாகுமரி - 368 கரூர் - 140 கிருஷ்ணகிரி - 140 மதுரை - 2,557 நாகை - 254 நாமக்கல் - 99 நீலகிரி - 89 பெரம்பலூர் - 158 புதுக்கோட்டை - 174 ராமநாதபுரம் - 839 ராணிப்பேட்டை - 754 சேலம் - 780 சிவகங்கை - 241 தென்காசி - 347 தஞ்சாவூர் - 448 தேனி - 702 திருப்பத்தூர் - 172 திருவள்ளூர் - 3,830 திருவண்ணாமலை - 1,824 திருவாரூர் - 455 தூத்துக்குடி - 943 திருநெல்வேலி - 796 திருப்பூர் - 180 திருச்சி - 682 வேலூர் - 1,308 விழுப்புரம் - 915 விருதுநகர் - 493