வராதீர்கள்... இந்தியா, இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ் மக்களுக்கு தடை

தடை விதித்தது... கொரோனா தொற்று அதிகமாக இருப்பதால் இந்தியா, இந்தோனேஷியா மற்றும் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்தவர்கள் வருவதற்கு மலேசியா தடை விதித்துள்ளது.

இதனால் மாணவர்கள், ஆய்வாளர்கள், நீண்டகாலக் குடியிருப்பாளர்கள் ஆகியோர் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக மலேசிய பாதுகாப்புத்துறை அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே கடந்த மார்ச் முதல் அனைத்து நாட்டு சுற்றுலா பயணிகள் வருகைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

இந்தத் தடை உத்தரவு நடப்பாண்டு இறுதி வரை நீட்டிக்கப்பட வாய்ப்பிருப்பதாகவும், கொரோனா பரவலைக் கண்காணித்து வருவதாகவும் தேவைப்பட்டால் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்றும் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.