தொழில் பழகுனராக விருப்பமா... பயிற்சி சேர்க்கை முகாம் நடக்கிறது

தஞ்சாவூர்: தஞ்சை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நாளை 13ம் தேதி காலை தேசிய தொழிற் பழகுநர் பயிற்சி அபிவிருத்தி திட்டத்தின்கீழ் தொழிற் பழகுநர் பயிற்சி சேர்க்கை முகாம் நடக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், ஆவின் உட்பட அரசு பொதுத்துறை நிறுவனங்கள், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முன்னனி நிறுவனங்கள் கலந்து கொண்டு தொழிற்பழகுநர் பயிற்சிக்கு டிகிரி, டிப்ளமோ மற்றும் ஐடிஐ பயிற்சி பெற்றவர்களை தேர்வு செய்ய உள்ளனர்.

8, 10 மற்றும் 12-வகுப்பு கல்வித்தகுதி உடையவர்களை நேரடியாக தொழிற்சாலைகளில் தொழில் பழகுநராக சேர்த்து 3 முதல் 6 மாதகால அடிப்படைப் பயிற்சியும், ஓராண்டு முதல் இரண்டு ஆண்டுகள் வரை தொழிற்பழகுநர் பயிற்சியும் பெற்று, தேசிய தொழிற்பழகுநர் சான்றிதழ் பெறலாம்.

பயிற்சிக்கு உதவித்தொகை ரூ.7000 முதல் நிறுவனத்தால் வழங்கப்படும். இச்சான்றிதழ் பெறுவதன் மூலமாக அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்பில் முன்னுரிமை, இந்திய அளவிலும், அயல்நாடுகளிலும் பணிபுரிந்திட பயனுள்ளதாக அமையும்.
இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி பயன்பெற கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.