தொழில்நுட்ப பணிகள் காரணமாக, வரும் 31-ம் தேதி சென்னை புறநகர் மின்சார ரயிலில் மாற்றம்


சென்னை : சென்னை பரங்கிமலை ரயில் நிலையம் அருகே நடைபெற்று வரும் தொழில்நுட்ப பணிகள் காரணமாக, வருகிற 31-ம் தேதி புறநகர் மின்சார ரயிலில் மாற்றம் ....

சென்னை பரங்கிமலை ரயில் நிலையம் அருகே நடைபெற்று வரும் தொழில்நுட்ப பணிகள் காரணமாக வருகிற 31 ஆம் தேதி காலை 19.45- மதியம் 3.45 வரை அந்த தடத்தில் புறநகர் மின்சார ரயில்கள் இயங்காது. அந்நேரத்தில் தாம்பரம்- செங்கல்பட்டு தடத்தில் 2 மார்க்கத்திலும் தலா 8 ரயில் சேவைகள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது.

சென்னை பரங்கிமலை ரயில் நிலையம், சென்னை கடற்கரை - செங்கல்பட்டு மார்க்கத்தில் தரைத்தளத்தில் அமையப்பெற்ற ரயில் நிலையமாகும். பரங்கிமலை - கடற்கரை வரையிலான பறக்கும் ரயில் நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது.

இதையடுத்து அது முதல் தளத்தில் அமைகிறது. அடுத்து, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் - பரங்கிமலை ரயில் நிலையம் வரை மெட்ரோ ரயில் திட்டம் அமையவிருக்கிறது. மேலும் இது இரண்டாவது தளத்தில் அமையும் என கூறப்படுகிறது.