எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடக்கம்

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் எப்போது என்பது குறித்து ஆலோசனை ... இடைக்காலபொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் துவங்கியது.

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை விரைவில் நடத்துவது தொடர்பாக கூட்டத்தில் விவாதிக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் கட்சியின் வளர்ச்சிப்பணிகள், இடைத்தேர்தல் தோல்வி உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.இதனை அடுத்து அதிமுக - பாஜக இடையே ஏற்பட்டுள்ள மோதல் தொடர்பாகவும் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

பொதுக்குழு செல்லும் என சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பையடுத்து இது தான் முதல் முறையாக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது.

இதற்கு முன்னதாக தேர்தல் விதிமுறைகளை மீறி திமுக செயல்பட்டது. தேர்தல் ஆணையம் அதனை கண்டுகொள்ளவில்லை என்று இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார்