சென்னை: தற்போதைய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவி காலம் நாளை மறுதினம் (ஞாயிற்றுக்கிழமை) அன்று முடிவடைகிறது. எனவே அவருக்கு நாடாளுமன்ற மைய மண்டபத்தில் பிரிவு உபசார விழா நாளை (சனிக்கிழமை) நடக்கிறது.
எனவே இந்த விழாவில் பங்கேற்க அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இன்று டெல்லி செல்கிறார்.
மேலும் ராம்நாத் கோவிந்த் பிரிவு உபசார விழாவில் பங்கேற்கும் எடப்பாடி பழனிசாமி, புதிய ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவியேற்பு விழாவிலும் கலந்துகொள்வார் என தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.