மின் இணைப்பில் பிரச்சனை இருந்தால் புகார் அளிக்க நம்பர்கள் வழங்கப்பட உள்ளதாக மின்வாரியம் தகவல்

சென்னை: தமிழக மின்வாரியம் மின் கணக்கீட்டை எளிதாக்கும் வகையில் பல்வேறு புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி கொண்டு வருகிறது. அந்த வகையில் தற்போது ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று கொண்டு வருகிறது.

எனவே இதன் வாயிலாக மின் பயனர்களுக்கு மாதந்தோறும் மின் கட்டணம் உடனடியாக SMS வாயிலாக தகவல் தெரிவிக்கப்படும். தற்போது இந்த ஸ்மார்ட் மீட்டர் பணிக்கான டெண்டர் கோரப்பட்டு பணிகள் நடைபெற்று கொண்டு வருகிறது.

அதே போன்று செல்போன் செயலி மூலமாகவும் மின் பயன்பாட்டை கணக்கீடு செய்து கொள்ள வழிவகை செய்யப்பட்டு உள்ளது.

இந்நிலையே மின் இணைப்புகளில் ஏதேனும் குறைபாடு இருந்தால் அது கொடுத்து புகார் தெரிவிக்கும் வகையில் பிரத்யேக எண்கள் வழங்கப்படவுள்ளதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது. மின் இணைப்பு மற்றும் மீட்டர் மின் கம்பங்கள் ஆகியவற்றில் ஏதேனும் பிரச்சனை என்றால் இது குறித்து புகார் அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.