இங்கு வருகிற 18-ம் தேதி வேலைவாய்ப்பு முகாம்

நாகப்பட்டினம் : தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற நிலையை உருவாக்க அரசு சார்பாக பல பகுதிகளில் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதன் மூலமாக பல்லாயிரக்கணக்கான வேலையில்லா பட்டதாரி இளைஞர்கள் பணி நியமனம் பெற்றுள்ளனர்.

இதையடுத்து தற்போது நாகப்பட்டினத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் வருகிற பிப் 18-ம் தேதியன்று நடைபெறவுள்ளது.


இம்முகாமில் முன்னணி தனியார் நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தில் இருக்கும் காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பான அறிவிப்பில், நாகப்பட்டினம் மாவட்டத்தில், வேலிபாளையம் ADM மகளிர் கல்லூரியில் வருகிற பிப் 18-ம் தேதி காலை 9 மணி முதல் 3 மணி வரை மெகா வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து இந்த முகாமில் கலந்து கொள்ள விரும்பும் நபர்கள் https://docs.google.com/spreadsheets /d/1aWvcVzZeKLn5kpxxMC3esyvLsjqwRgWjQYPtu43qT8A/edit#gid=0 என்ற google sheet லிங்க் கிளிக் செய்து கேட்கப்பட்டுள்ள தங்களின் விவரங்களை நிரப்ப வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதை நிரப்ப முடியாதவர்கள் deonagai@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் விவரங்களை அனுப்ப வேண்டும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.