சுகாதாரத்துறையில் காலிப்பணியிடங்களான வேலைவாய்ப்பு முகாம் .. நாளை திருப்பூரில்

திருப்பூர் : திருப்பூர் மாவட்ட சுகாதார திட்டத்தின் கீழ் ஆம்புலன்ஸ் சேவை பிரிவில் உள்ள காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கான ஆட்கள் தேர்வு நாளை ...... தமிழ்நாடு சுகாதாரத் திட்டத்தின் கீழ் திருப்பூர் மாவட்டத்தில் இயக்கப்படும் ஆம்புலன்ஸ் சேவை பிரிவில் மருத்துவ உதவியாளர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இந்த பணிக்கு E.M.D., B.Sc., Nursing, G.N.M , ANM, – DMLD மற்றும் Life Science ஆகிய பாடப்பிரிவுகளில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கான வேலைவாய்ப்பு முகாம் நாளை (ஜூன். 14) திருப்பூரில் உள்ள பழைய மருத்துவமனை வளாகத்தில் காலை 9 மணி முதல் 2 மணி வரை நடைபெறும்.

இதனை அடுத்து இதில் விண்ணப்பதாரர்கள் எழுத்துத்தேர்வு, மருத்துவ மற்றும் மனிதவளத்துறை நேர்முகத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் இந்த பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ 15,435 ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் அத்துடன் பணி தொடர்பாக 50 நாட்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த வேலைவாய்ப்பு முகாம் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு 73977 24811, 89255 06308 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.