தூத்துக்குடி மாவட்டத்தில் வருகிற ஆகஸ்ட் 12 ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாம்

தூத்துக்குடி : தமிழகத்தில் இளைஞர்களுக்கு பெரிய பிரச்சனையாக இருப்பது வேலை கிடைக்காமல் இருப்பது தான். அதனால் அரசு சார்பில் ஒவ்வொரு மாவட்டத்திலும் வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு பணிகள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் வரும் ஆகஸ்ட் 12-ம் தேதி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற இருப்பதாக அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

இதையடுத்து இம்முகாம் 12.08.2023 அன்று காலை 9 மணி முதல் 3 மணி வரை, கோவில்பட்டி நாடார் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற இருப்பதாக வெளியான அறிவிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது. மேலும் இதில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள பட்டதாரிகள் https://forms.gle/7N1GAFEMKKgmsyyr8 என்ற லிங்க் மூலமாக தங்களுடைய விபரங்களை பூா்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்.

அதே போன்று வேலை அளிப்பவர்கள் https://forms.gle/KFaMB3r6QpLk6oi37 என்ற லிங்க் மூலமாக தங்களுடைய நிறுவனத்திற்கு தேவையான காலியிடப் பணி விபரங்களை பூா்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்.