தமிழகத்தில் நாளை (செப்.24) வேலைவாய்ப்பு முகாம்

சென்னை: தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. ஆண்டுதோறும் தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகம் சார்பாக அங்கு பயிலும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கும் நோக்குடன் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தி வருகிறது.

இதனை அடுத்து அந்த வகையில் நடப்பாண்டு செப்டம்பர் 24ம் தேதி சென்னை சைதாப்பேட்டையில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில் வேலைவாய்ப்பு முகாம் ஒன்று நடைபெறவுள்ளது.

இம்முகாமில் 100 க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்க உள்ளனர். அதிலும் குறிப்பாக மாற்று திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பை அளிக்கும் நிறுவனங்களும் பங்கேற்கவுள்ளனர்.

அதனால் தற்போது பல்கலைக்கழகத்தில் படித்து வரும் மாணவர்கள், முன்னாள் மாணவர்கள், மாற்றுத்திறனாளர்கள் ஆகியோர் பங்கேற்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த முகாமில் நிறுவனங்கள் மூலம் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் பணி நியமன ஆணைகளை வழங்குவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.