பொறியியல் படிப்பு .. 2ம் சுற்று கலந்தாய்வு இன்று தொடங்குகிறது

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் 430 பொறியியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளில் 1 லட்சத்து 57 ஆயிரம் இடங்கள் உள்ளன. இவற்றில் நிரப்புவதற்கான கலந்தாய்வு கடந்த ஜூலை 22 -ம் தேதி தொடங்கியது.

இதையடுத்து முதல் கட்டமாக மாற்றுத்திறனாளிகள் , விளையாட்டு பிரிவு மாணவர்கள் ஆகியோருக்கான சிறப்பு பிரிவு கலந்தாய்வு கடந்த 22 -ம் தேதி தொடங்கி 26ம் தேதி வரை நடைபெற்றது. இப்பிரிவில் 8,764 இடங்களில் உள்ள நிலையில் 775 இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டன.


இதில் 90 இடங்கள் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் நிரம்பியுள்ளது. இதையடுத்து பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு கடந்த 28-ம் தேதி தொடங்கி 3 கட்டங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. பொது கலந்தாய்வு கடந்த 28ஆம் தேதி முதல் இன்று வரை நடத்தப்படுகிறது.

இந்த நிலையில் பொறியியல் படிப்பில் சேருவதற்கான 2ம் சுற்று கலந்தாய்வு இன்று தொடங்குகிறது http://tneaonline.org என்ற இணையதளத்தில் கல்லூரிகளை மாணவர்கள் பதிவு செய்யலாம். வரும் 11ம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறும் நிலையில் வருகிற 13ம் தேதி ஒதுக்கீட்டு உத்தரவுகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.