புதிய சாதனை படைத்த மாஜி அலைச்சறுக்கு வீரர்

சிட்னி: 40 மணிநேரம் அலைச்சறுக்கு... ஆஸ்திரேலியாவின் சிட்னி கடற்பகுதியில் முன்னாள் அலைச்சறுக்கு வீரர் பிளேக் ஜான்ஸ்டன் 40 மணி நேரத்திற்கு மேல் அலைச்சறுக்கு செய்து புதிய சாதனை படைத்தார்.

சிட்னியின் தெற்கில் உள்ள க்ரோனுல்லா கடற்கரையில் அலைச்சறுக்கை நிறைவு செய்து கரைக்கு திரும்பிய ஜான்ஸ்டனை அவரது குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள் ஆரவாரத்துடன் வரவேற்றனர்.

இதன் மூலம் தென்னாப்பிரிக்காவின் ஜோஷ் என்ஸ்லினின் முந்தைய சாதனையான 30 மணி நேரம் 11 நிமிடங்கள் அலைச்சறுக்கு சாதனையை ஜான்ஸ்டின் முறியடித்தார்.

இப்படி தொடர்ந்து 40 மணிநேரத்திற்கும் மேல் அலைச்சறுக்கு செய்து புதிய உலக சாதனை படைத்த அவருக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுக்கள் தெரிவித்தனர்.