கொழும்பு: இடைக்காலத்தடை உத்தரவு... கல்முனை மாநகர சபைக்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வேட்புமனுக்களை ஏற்றுக் கொள்வதற்கு விடுக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.
கல்முனை மாநகர சபைக்கான உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை இன்று வரை ஏற்றுக் கொள்வதைத் தடுத்து, உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்திருந்தது.
சாய்ந்தமருது பிரதேசத்தை சேர்ந்த, அரச சேவை ஆணைக்குழு உறுப்பினர் ஏ.
எல். எம். சலீம் மற்றும் உள்ளூராட்சி மன்ற பிரதிநிதி ஏ. ஆர். எம். அசீம்
ஆகியோர் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுக்களை பரிசீலித்த உயர்நீதிமன்ற
நீதியரசர்களான விஜித் மலல்கொட, யசந்த கோதாகொட மற்றும் மஹிந்த சமயவர்தன
ஆகியோரினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
நேற்று
குறித்த மனு மீண்டும் விசாரணை எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்தநிலையில்
தீர்ப்பு வழங்கப்படும் வரை குறித்த இடைக்கால தடை தொடர்ந்தும்
நீடிக்கப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.