தமிழகத்தில் நியாயவிலைக் கடைகள் இன்று இயங்காதாம்

சென்னை: இன்று ரேஷன் கடைகள் விடுமுறை .... தமிழ்நாட்டில் கடந்த 12-ஆம் தேதி தீபாவளி பண்டிகை என்பதால் அன்றைய தினம் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதையடுத்து தீபாவளி விடுமுறையை முன்னிட்டு அதற்கு முன்னதாக பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்கள் கிடைக்கும் வண்ணம் கடந்த நவம்பர் 3 மற்றும் 10ம் தேதி ரேஷன் கடைகள் அனைத்தும் இயங்கின.

தீபாவளி பண்டிகை ஒட்டி கடந்த 3ஆம் தேதி முதல் 10ம் தேதி வரை தொடர்ச்சியாக விடுமுறை என்று நியாய விலை கடைகள் இயங்கி பொது மக்களுக்கு தேவையான அனைத்து பொருட்களும் வழங்கப்பட்டது.


இந்த நிலையில் நியாயவிலை கடைகள் விடுமுறை இன்று இயங்கியதற்கு ஈடாக இன்று தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதற்கு முன்னதாக கடந்த 13ஆம் தேதி அனைத்து நியாயவிலைக் கடைகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.