அஞ்சல் வழியாக இருப்பிடத்திற்கு வரும் குடும்ப அட்டைகள்

சென்னை: தமிழக அரசு ஆணை... புதிய மின்னணு குடும்ப அட்டைகள் மற்றும் நகல் குடும்ப அட்டைகளை பயனாளிகளின் விருப்பத்தின் பெயரில் அஞ்சல் வழியாக இருப்பிடத்திற்கு அனுப்பி வைக்க உத்தரவிட்டு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி விண்ணப்பதாரர் புதிய குடும்ப அட்டை விண்ணப்பிக்கும் பட்சத்தில் இதனை அஞ்சல் வழியாக பெற விரும்புகிறாரா? அல்லது நேரில் பெற விரும்புகிறாரா? என விருப்பம் தெரிவிக்க இணையத்தில் உரிய வசதி செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது.

தகுதியின் அடிப்படையில் குடும்ப அட்டை வழங்கும் போது அதற்கான செலவு கட்டணமாக ரூ.25 செலுத்துமாறு தெரிவித்து குருஞ்செய்தியினை அஞ்சல் வழியாக பெருவதற்கு விருப்பம் தெரிவிக்கும் அட்டைத்தாரர்களுக்கு மட்டும் அனுப்படும் என தமிழக அரசு அரசாணையில் தெரிவித்துள்ளது. புதிய குடும்ப அட்டை எண்ணை செயலாக்க படுத்தும் விளக்க குறிப்பு முறையையினை அனுப்பி வைக்கப்படும் என்றும் நகல் குடும்ப அட்டை பெறும் குடும்ப அட்டைதாரர்கள் ரூ.45 வரை செலுத்த வசதி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.