கழிவறையில் தோனி படம் ஒட்டப்பட்டதற்கு ரசிகர்கள் கடும் கண்டனம்

மதுரை: கழிவறையில் தோனி படமா?... மதுரை மாநகராட்சி ஆண்கள் கழிவறையில் கிரிக்கெட் வீரர் தோனியின் புகைப்படம் வைக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை என்பது அரசியல் கட்சியினருக்கு பல்வேறு திருப்புமுனைகளை ஏற்படுத்தும். மதுரையில் அரசியல் கட்சி மாநாடு என்றாலே களைகட்டும்.

அதே வேளையில் மதுரையில் சித்திரை திருவிழா உள்ளிட்டவையும் பிரபலமாகும். மதுரை தூங்காநகரம் என்பதால் 24 மணி நேரமும் சைவ மற்றும் அசைவ உணவுகள் கிடைக்கும். அது போல் இந்த மதுரையில் நடிகர், நடிகைகள், அரசியல் கட்சியினர் போஸ்டர் ஒட்டி தமிழகத்தையே திரும்பி பார்க்க வைப்பார்கள்,

இந்நிலையில் மதுரை மாநகராட்சி ஆண்கள் கழிவறையில் கிரிக்கெட் வீரர் தோனியின் புகைப்படம் வைக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாட்டுத் தாவணி பேருந்து நிலையத்தில் உள்ள ஆண்கள் கழிவறையில் தோனியின் புகைப்படம் வைக்கப்பட்டுள்ளது.

இதை பார்த்த ரசிகர்கள் கடும் கோபமடைந்து சமூகவலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்கள். மாநகராட்சியின் இந்த செயலுக்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. உடனே தோனியின் புகைப்படத்தை நீக்க வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

ஆண், பெண் என படம் வரைந்தாலே கழிவறையை அடையாளம் கண்டுக் கொள்ளும் நிலையில் எதற்காக தோனி புகைப்படம் வைக்க வேண்டும் என்றெல்லாம் கேள்வி எழுந்தது.