மீண்டும் காய்ச்சல்... இ.கம்யூ., மூத்த தலைவர் நல்லகண்ணுவுக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணு காய்ச்சல் காரணமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.


வயது மூப்பு காரணமாக பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதைத் நல்லகண்ணு தவிர்த்து வருகிறார். 75வது சுதந்திர தினவிழாவில் அவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தகைசால் தமிழர் விருதை வழங்கி சிறப்பித்தார்.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு லேசான காய்ச்சல் அறிகுறிகள் இருந்ததால் நல்லகண்ணு, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் டாக்டர்களின் தீவிர கண்காணிப்புக்கு பிறகு அவருக்கு காய்ச்சல் குணமடைந்து வீடு திரும்பினார்.

வீட்டில் ஓய்வில் இருந்த அவருக்கு மீண்டும் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் நேற்று ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.