எழுத்தாளர்களுக்கு நிதியுதவி 1 லட்சமாக உயர்வு..தமிழக அரசு அறிவிப்பு..

தமிழ்நாடு : தமிழகத்தில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்ப்பில் சிறந்த எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் நிதியுதவி ஐம்பது ஆயிரம் ரூபாயிலிருந்து ஒரு லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த நிதி ஆண்டு முதல் இது அமலுக்கு வருகிறது.

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் கலை இலக்கிய மேம்பாட்டு பணி அமைப்பு நிதி மூலம் கிடைக்கும் வட்டித் தொகையிலிருந்து 10 ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர், ஆதி திராவிடர் அல்லாத பழங்குடியினர் இனத்தை சேர்ந்தவர் ஒரு எழுத்தர் உள்ளிட்ட 11எழுத்தாளரின் சிறந்த இலக்கிய படைப்பை தெரிவு செய்து அவர்களுக்கு தல ரூ. 50,000 அல்லது புத்தகம் வெளியட ஆகும் செலவு, இவற்றில் எது குறைவோ அதை அரசு வழங்க உள்ளது.


ஆதலால் நிதி உதவி ஐம்பது ஆயிரம் ரூபாயிலிருந்து ஒரு லட்சமாக உயர்த்த உத்தரவு விட்டுள்ளது.

இந்த நிதியுதவி தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் அந்தந்த மாவட்டங்களில் ஊடங்கங்கள் மற்றும் இணையதளம் மூலம் விளம்பரப்படுத்த வேண்டும். ஒரு முறை தேர்வு செய்யபப்ட்ட எழுத்தாளர் ஐந்து ஆண்டுகளுக்கு பிறகே மறுமுறை விண்ணபிக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.