புனே மாவட்ட தவுந்த் தாலுக்காவில் உள்ள தனியார் ரசாயன ஆலையில் தீ விபத்து

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள தனியார் ரசாயன ஆலையில் பயங்கர வெடிச் சத்தத்துடன் தீ விபத்து ஏற்பட்டது.

மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்டத்தில் தவுந்த் தாலுக்காவில் குர்கும்ப் பகுதியில் ஒரு தனியார் ரசாயன ஆலை இயங்கி வருகிறது.
இங்கு பலத்த வெடி ஓசையுடன் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

தகவல் அறிந்த வந்த தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் யாரும் பாதிப்பு அடையவில்லை என கூறப்படுகிறது. அந்த இடத்தை காவல் துறையினர் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர். இந்த விபத்துக்கான காரணம் குறித்த தகவல் ஏதும் வெளியாகவில்லை.