இன்று யாழ்ப்பாணம் பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலய கொடியேற்று விழா

இன்று காலை கொடியேற்றம்... வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ். பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலய சார்வரி வருட மஹோற்சவப் பெருந் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிறது.

தொடர்ந்தும் 18 தினங்கள் இடம்பெறும் இவ்வாலய மஹோற்சவப் பெருந் திருவிழாவில் அடுத்த மாதம்-9 ஆம் திகதி காலை 9 மணிக்குத் தேர்த் திருவிழா நடக்கிறது. மறுநாள் 10 ஆம் திகதி வியாழக்கிழமை முற்பகல்-11 மணியளவில் திருவடிநிலை தீர்த்தக் கரையில் தீர்த்தோற்சவமும், அன்றைய தினம் இரவு 7 மணியளவில் கொடியிறக்க உற்சவமும் நடைபெறும்.

இதேவேளை, நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக மஹோற்சவ கால நேரங்களில் மாற்றங்கள் செய்யப்படுமென ஆலய பரிபாலன சபையினர் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் மஹோற்சவப் பெருந் திருவிழாவில் கலந்து கொள்ளும் அடியவர்கள் சுகாதார நடைமுறைகளைக் கருத்திற் கொண்டும், சைவசமய விழுமியங்களுக்கு அமையச் செயற்படவும் ஆலய பரிபாலன வேண்டுகோள் விடுத்துள்ளது.