உலகளவில் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 60.53 கோடியாக உயர்வு

சீனா: சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி மிக பெரும் பாதிப்பை ஏற்படுத்தி கொண்டு வருகிறது.

எனவே கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் வைரஸ் பல்வேறு வகையில் உருமாற்றமடைந்து பாதிப்பு உயர்ந்து கொண்டே வருகிறது.

இதை அடுத்து இந்த நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 60 கோடியே 53 லட்சத்து 27 ஆயிரத்து 755 ஆக உயர்ந்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 1 கோடியே 84 லட்சத்து 84 ஆயிரத்து 726 பேர் சிகிச்சை பெற்று கொண்டு வருகின்றனர்.

மேலும் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை மட்டும் 58 கோடியே 3 லட்சத்து 56 ஆயிரத்து 171 பேர் குணமடைந்துள்ளனர். இருந்தாலும் கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 64 லட்சத்து 86 ஆயிரத்து 858 பேர் உயிரிழந்துள்ளனர்.